enforced disappearance

வலுக்கட்டாயமாக காணாமல் போதல்

1971 மற்றும் 1987-1989 ஆம் ஆண்டுகளில் ஜனதா விமுக்தியின் தலைமையிலான இரண்டு கிளர்ச்சிகள் மற்றும் 3 தசாப்த கால உள்நாட்டுப் போரில் இலங்கையில் மக்கள் பெருமளவில் பலவந்தமாக காணாமல் போனார்கள்.

சூழல்

“வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையின்படி, அரசின் முகவர்கள் அல்லது நபர்கள் அல்லது நபர்களின் குழுக்களால் கைது செய்யப்படுதல், தடுத்துவைத்தல், கடத்தல் அல்லது சுதந்திரத்தை பறிக்கும் வேறு வடிவமாகவே பலவந்தமாக காணாமற்போதல் கருதப்படுகிறது. அரசின் அங்கீகாரம், ஆதரவு அல்லது ஒப்புதல், அதைத் தொடர்ந்து சுதந்திரம் பறிக்கப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல் போனவரின் தலைவிதி அல்லது இருப்பிடத்தை மறைத்தல், அத்தகைய நபரை சட்டத்தின் பாதுகாப்பிற்கு வெளியே வைக்கிறது.

1971 மற்றும் 1987-1989 ஆம் ஆண்டுகளில் ஜனதா விமுக்தியின் தலைமையிலான இரண்டு கிளர்ச்சிகள் மற்றும் 3 தசாப்த கால உள்நாட்டுப் போரில் இலங்கையில் மக்கள் பெருமளவில் பலவந்தமாக காணாமல் போனார்கள். பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர், கொழும்பு புறநகர்ப் பகுதியில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் போன்று (நேவி 11 கேஸ் என அழைக்கப்படும்) தென்னிலங்கையிலும் பல காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வலுக்கட்டாயமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்குழுவின் கூற்றுப்படி, உலகிலேயே அதிகளவான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தின் கீழ், இலங்கை 4 பொறிமுறைகளை நிறுவுவதாக உறுதியளித்தது, ஆனால் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் மட்டுமே நிறுவப்பட்டது. 2016 இல் காணாமல் போனோர் அலுவலகம் (ஸ்தாபனம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்) சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை அங்கீகரித்து, இலங்கை 2018 இல் தொடர்புடைய சட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனினும், 2021 இல் இலங்கை ஐநா தீர்மானம் 30/1ல் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் பிறகு, ஐ.நா.வின் அனைத்து தீர்மானங்களையும் இலங்கை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், 2023 இல் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட குறைந்தது 6 ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய பொறிமுறைகளில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அனைத்து ஆதாரங்களையும் வழங்கும் சாட்சியங்களை வழங்கினர். . ஆனால் எந்த ஆணைய நடவடிக்கையும் உண்மை மற்றும் நீதி தொடர்பாக அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

வரலாற்றில் பல தடவைகள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். 1984 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு தாய்மார்கள் தமது காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி ஒரு முன்னணியை உருவாக்கினர். 1988-1989 ஜே.வி.பி.யின் இரண்டாம் எழுச்சியின் போது காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட தெற்கில் உள்ள தாய்மார்கள் 1990 இல் நீதிக்காக முன்னணியை உருவாக்கினர். இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் வடக்கு-கிழக்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் கடந்து சென்றதாக பல அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன பின்பு அவர்கள்  இராணுவக் காவலில் வைக்கப்பட்டு, அன்றிலிருந்து அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

2017 பெப்ரவரி மாதம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்கள் கிளிநொச்சியில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கை ஆயுதப்படையினரால் சரணடைந்த அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்தப் போராட்டம் வடக்கு-கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் வேகமாகப் பரவியது. இன்றுவரை 200க்கும் மேற்பட்ட உறவினர்கள், பெரும்பாலும் தாய்மார்கள் இறந்துவிட்டனர். இந்த நீதிக்கான போராட்டம் இலங்கையின் மிக நீண்ட தொடர்ச்சியான போராட்டமாக கருதப்படுகிறது.

கண்காட்சி கேலரி

மௌனத்தின் வழியே ஒரு காட்சி பயணம்: புகைப்படக் காப்பகங்கள் UNCOVER 2024