UncoveR
உண்மை | நீதி |வாழ்க்கை

நாம் இருக்கவும் இறக்கவும் கூடாது
Act Now என்பது இலங்கையில் நீதியை முன்னேற்றுவதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு இளைஞர் கூட்டமைப்பாகும்.அர்த்தமுள்ள மாற்றம் தகவலறிந்த மற்றும் ஈடுபாடு கொண்ட குடிமக்களிடமிருந்து தொடங்குகிறது என்ற நம்பிக்கையில் வேரூன்றிய Act Now, அனைத்து தரப்பு மக்களின் குரல்களையும் பெருக்கி, அனைத்து சமூகங்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்த செயல்படுகிறது.

மலையக தமிழ் மக்கள்
2023 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவவாதிகள் தென்னிந்தியாவில் இருந்து இலங்கையில் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மக்களை அழைத்து வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்தன. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தென்னிந்தியாவில் பரவிய பஞ்சம் மற்றும் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகள்…

வலுக்கட்டாயமாக காணாமல் போதல்
1971 மற்றும் 1987-1989 ஆம் ஆண்டுகளில் ஜனதா விமுக்தியின் தலைமையிலான இரண்டு கிளர்ச்சிகள் மற்றும் 3 தசாப்த கால உள்நாட்டுப் போரில் இலங்கையில் மக்கள் பெருமளவில் பலவந்தமாக காணாமல் போனார்கள். பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர், கொழும்பு புறநகர்ப் பகுதியில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் போன்று (நேவி 11 கேஸ் என அழைக்கப்படும்) தென்னிலங்கையிலும் பல காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நில அபகரிப்பு
இராணுவமயமாக்கல், காணி சுவீகரிப்புச் சட்டங்கள், பாதுகாப்புப் படைகள், வனவிலங்கு மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் போன்ற அரச நிறுவனங்களின் காணி சுவீகரிப்பு, முறைசாரா அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கை சமூகம் தமது காணி உரிமைகளை அனுபவிக்க முடியாதுள்ளது.

மத சுதந்திரம்
பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர வன்முறையை பரப்பின. தர்கா, திகன, மினுவாங்கொட பகுதிகளில் இடம்பெற்ற அழிவுகளே அதற்குச் சான்றாகும். எனினும், அந்த வன்முறைகள் எதற்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை, நீதி வழங்கப்படவில்லை.

இராணுவமயமாக்கல்
உலகில் அதிக இராணுவமயப்படுத்தப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. 2018 ஆம் ஆண்டில், உலக வங்கி 317,000 சேவை பணியாளர்கள் நாட்டில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது, இது இங்கிலாந்தின் வழக்கமான படைகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் அதிக அளவிலான பாதுகாப்புச் செலவினங்களைத் தொடர்ந்து ஒதுக்கி வருகின்றன.
” நீதிக்கான ஆசை இல்லாதது எங்களை ஒரு பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது. எனவே, Uncover உண்மை, நீதி மற்றும் வாழ்க்கைக்கானது. “
ACT NOW 2024
